Wednesday, December 31, 2014

சித்தர்களின் உடலுறவு கொள்கை


பரத்துவாஷர் மற்றும் வால்மீகி முதலிய மகான்களால் விதிக்கப்பட்ட உடலுறவு கொள்கை
விலக்கான 3 நாட்களையும் தள்ளி 4ம் நாள் முதல் 16ம் நாள் வரை உடலுறவு கொண்டால்தான் குழந்தை உற்பத்தியாகும். மற்ற நாட்களில் கருப்பை மூடிக் கொள்ளும்.
4ம் நாளில் கூடி கருத்தரித்தால் பக்தியுடன் கூடிய ஒரு ஆண் மகன் உருவாகும்.
5ம் நாள் கூடினால் வேசித் தன்மையுள்ள, அவதூராண பெண் மகள் உருவாகும்.
6ம் நாள் கூடினால் ஆயுள் முழுவதும் வறுமையில் வாழும் ஆண்மகன் உருவாகும்.
7ம் நாள் கூடினால் தன் கணவனுடனும் பிறருடனும் வாழும் ஒரு பெண்மகள் உருவாகும்.
8ம் நாள் கூடினால் பக்தியுள்ள யாவரும் போற்றும் அற்புத ஆண்மகன் உருவாகும்.
9ம் நாள் கூடினால் கற்புக்கரசியாய் பக்தியுள்ளவளாய் பூரண ஆயுளோடுக் கூடிய பெண்மகள் உருவாகும்.
10ம் நாள் கூடினால் அளவற்ற செல்வந்தனாகி பூரண ஆயுளுடன் கூடிய மகன் உருவாகும்.
11ம் நாள் கூடினால் மஹாப்பதிவிரதை, உலகரிந்த உபகாரியான அழகுடைய பெண்மகள் உருவாகும்.
12ம் நாள் கூடினால் சன்மார்க்க சாதனையாளனாக உலகம் புகழும் ஆண்மகன் உருவாகும்.
13ம் நாள் கூடினால் ஆடல் பாடல்களில் வல்லவனாய் பூரண ஆயுளுடன் வாழும் பெண்மகள் உருவாகும்.
14ம் நாள் கூடினால் தர்ம சிந்தை, அதிகாரம் செய்யும் அற்புத புகழுடன் வாழும் ஆண்மகன் உருவாகும்.
15ம் நாள் கூடினால் 32 லட்சணங்களுடன் அநேக குழந்தைகளுடன் அரச பத்தினியாய் வாழும் பெண்மகள் உருவாகும்.
16ம் நாள் கூடினால் அநேக சிறப்புகளுடன் அற்புத அரசனாக வாழும் ஆண்மகன் உருவாகும்.
மேற் கண்டவைகளை மனதில் கொண்டு நல்ல குழந்தைகளையே உலகிற்கு வரவிடுங்களேன.

COMPUTER WATCHMAN - கணனிக்கு ஒரு கண்காணிப்பாளர்


நீங்கள் பயன்படுத்தாத நேரத்தில் உங்களது கணனியை வேறு சிலர் உபயோகித்தால், அது தொடர்பான கண்காணிப்பு உங்களுக்கு அவசியமானது கணனியில் ஏற்படக்கூடிய குளறுபடிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இத்தகைய கண்காணிப்பு அவசியம். இதற்கு "KEYLOGGER" என்ற வகை மென்பொருள் பொதுவாகபப் பயன்படுகிறது.
கணனி ஒன்றில் ஒருவர் என்னென்ன செயற்பாடுகளைச் செய்கிறாரோ, அனைத்தையும் இதன்மூலமாகப் பதிவுசெய்து நாம் அறிந்துகொள்ளலாம். கணனியைப் பயன்படுத்தும் தமது குழந்தைகளைக் கண்காணிப்பதற்கு, பெற்றோர்கள் விரும்பினால்கூட இந்த மென்பொருளை உபயோகிக்கலாம்.
இந்த மென்பொருள் குறிப்பிட்ட நேர இடைவெளியில் கணனியின் செயற்பாடுகளை SCREEN SHOT எடுத்து வைத்திருக்ககும் அத்துடன், CHAT HISTORY, HISTORY, LOG FILE என்பனவற்றையும் சேமித்து வைத்திருக்கும்.
இதன் மேலும் சில சிறப்பம்சங்கள்.
* Record Each Keystrok :
கீபோர்ட்டில் அழுத்தப்படும் அத்தனை விசைகளையும் பதிவு செய்து வைக்கிறது.
* Instant Chat Messages Recording : Facebook, Google Talk, Yahoo Messenger போன்றவற்றில் Chat செய்பவற்றை அப்படியே பதிவு செய்கிறது.
Track Emails : குறித்த கணனியில் இருந்து அனுப்பப்படும், பெறப்படும் மின்னஞ்சல்களைக் கண்காணிக்கிறது.
* Monitor Websites :
கணனியில் இருந்து உலாவும் இணையத்தளங்களைக் கண்காணித்து, பதிவு செய்து வைக்கிறது.
* Review Every Downloaded File : தரவிறக்கும் ஒவ்வொரு கோப்புக்கள் பற்றிய தகவல்களையும் பதிவு செய்கிறது.
இந்த KEYLOGGER ்மென்பொரருளில் சிறப்பாக செயற்படுபவை என பரிந்துரைக்கப்பட்ட சில இலவச மென்பொருட்கள்.
- Actual Keylogger
- Revealer Keylogger
- Refog free Keylogger
- Home Keylogger
- Kidlogger
இந்த மென்பொரிள் கணனியில் மட்டுமல்லாது செல்பேசி, டிஜிட்டல் தொலைக்காட்சி போன்றவற்றிலும் பாவனைக்கு வந்துவிட்டது.
KIDLOGGER மென்பொருளை தரவிறக்க, கீழ் உள்ள சுட்டடியை பயன்படுத்தவும்
http://kidlogger.net/download.html 

Saturday, December 27, 2014

The World Unknown Secerets PART 2






























TV SCREEN and COMPUTER CONNECTION - தொலைக்காட்சி ஸ்கிரீனுடன் லாப்டாப்பை இணைப்பது எப்படி



யூ-ட்யூப் வீடியோக்களை பெரிய திரையில் பார்க்க வேண்டுமா, உங்களது லாப்டாப் கணினியை பெரிய ஸ்கிரீன் கொண்ட தொலைகாட்சியில் இணைத்து இணையதள வீடியோக்களை பெரிய திரையில் காண முடியும்.
இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா, சிறிய திரை கொண்ட லாப்டாப் கணினியை தொலைகாட்சி திரையில் இணைப்பது ?

அனைத்து கணினியிலும் எஸ்-வீடியோ போர்ட் இருக்கும், இதை தொலைகாட்சி திரையுடன் மலிந்த விலையில் கிடைக்கும் எஸ்-வீடியோ கேபிளை இணைக்க முடியும். பழைய மானி்டர் உபயோகிக்கும் நிலையில் 15-pin VGA கேபிள் கொண்ட இணைக்கலாம்.

லாப்டாப் கணினியை தொலைகாட்சி திரையுடன் இணைத்தாகிவிட்டது அடுத்து ஆடியோ வசதி ஏற்படுத்த வேண்டும், இதற்கு 3.5mm மினி ப்ளக் வேண்டும். இந்த கேபிளில் கருப்பு மற்றும் சிவப்பு நிற சாக்கெட்கள் இருக்கும். இந்த சாக்கெட்களை தொலைகாட்சியில் இருக்கும் அதே நிற சாக்கெட்களில் பொருத்த வேண்டும்.

லாப்டாப் கணினியின் டிஸ்ப்ளே செட்டிங்ஸ் சென்று அதன் அவுட்புட் மோடை டிவி ஸ்கிரீனுக்கு மாற்ற வேண்டும்.

லாப்டாப் கணினியை தொலைகாட்சி திரையில் இணைத்தாகிவிட்டது, அடுத்து தொலைகாட்சி ரிமோட்டில் எக்ஸ்டெர்னல் அவுட்புட் தேர்வு செய்து வீடியோ 1, வீடியோ 2 அல்லது HDMI 1 ஆப்ஷன்களை மாற்றி, உங்களது இணைப்புக்கு ஏற்றவாரு வீடியோ ஏதாவதொரு மோடில் ஒளிபரப்பாகும்.

கடவுள் பற்றி வேதங்கள் என்ன சொல்கின்றன ?

கடவுள் எங்கே இருக்கிறார் ? எப்படி இருக்கிறார் ? கடவுளைக் காண முடியுமா ? என்றெல்லாம் பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவற்றிற்கெல்லாம் பதில் இதோ...................
 

இராம் மனோகர் - வேதங்களின் கடவுள் குறித்த கருத்து இன்றைய விஞ்ஞானத்தின் கருத்தை ஒத்ததாகவே இருக்கிறது. சொல்லப் போனால் இன்னும் மிகத் தெளிவாக, விளக்கமாகவே சொல்லப்பட்டுள்ளது. விஞ்ஞானம் அதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது அவ்வளவுதான். வேதத்திலோ, விஞ்ஞானத்திலோ குழப்பம் இல்லை. நமக்குத்தான் குழப்பம். காரணம், நமக்கு தெரியாத விஷயங்களைக் கூட தெரிந்தது போலக் காட்டிக் கொள்வதில் நமக்கு நிகர் நாமேதான். அது போல படித்தோ அல்லது கேள்விப்பட்ட விஷயங்கள் சிலவற்றை நாம் ஆராய்வதே இல்லை. அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். ஏனென்றால் நம்மால் ஆராய முடியாத தொலைவிலோ, நிலையிலோ அவைகள் இருப்பதினாலோ அல்லது ஆராய முடியாத நிலையில் நாம் இருப்பதினாலோ அது போன்ற விஷயங்களை, நாம் அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். நம் அறிவுக்கு எட்டாத பல விஷயங்கள் சுவாரஸ்யமாக இருப்பதால் அமானுஸ்ய விஷயங்கள் அல்லது அற்புதங்கள் என்று சொல்லி அவற்றை ஆராயமலேயே நாம் நம்புகிறோம். அது போல சில ஆதார பூர்வமான விஷயங்களைக் கூட கடுமையாக எதிர்ப்பவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள். நாம் எவ்வளவுதான் விளக்கிச் சொன்னாலும், அவை அனைத்தையும் தங்கள் வாதத் திறமையால் மறுத்துப் பேசுவார்கள். கடவுள் மறுப்பாளர்கள்தான் என்று இல்லை ஆன்மீகவாதிகளும் அப்படி பேசுவதுண்டு. நிலாவில் மனிதன் காலடியை பதித்து விட்டான் என்று உலகமே பெருமைபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, அது உண்மையில்லை நிலா போன்று செட் அமைத்து நம்மை ஏமாற்றி விட்டார்கள் என்று சொன்ன ஒரு ஆன்மீகவாதி ஒருவர் இன்னும் இருக்கிறார். அதற்குப் பிறகு வான்வெளி ஆராய்ச்சி எவ்வளவோ முன்னேறி செவ்வாய் கிரகத்தில் போய் நிற்கிறது. அதையும் தாண்டி ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வதும் தவறு, மறுப்பதும் தவறு. ஆராய வேண்டும். நம் அறிவின் திறனைக் கொண்டு அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து, தெளிந்து அதற்குப் பிறகுதான் மறுக்கவோ அல்லது ஏற்றுக் கொள்ளவோ வேண்டும். கடவுள் விஷயமும் அப்படித்தான். கடவுள் எப்படி இருக்கிறார் என்று கடவுளின் சூக்கும நிலையை விளக்குகின்ற அளவு அன்றைய மொழிகள் அமைந்திருக்கவில்லையாதலால், கடவுள் வார்த்தைகளுக்கு எட்டாதவர் என்று சொல்லி ஓரளவு விளக்கி வைத்தார்கள். ஆனால், அதற்கு பிறகு வந்தவர்கள் அந்த வார்த்தைகளுக்கு எட்டாத அனைத்து சக்திகளையும் உள்ளடக்கிய வல்லமையான பரம் பொருளுக்கு உருவங்கள் படைத்து விளக்க முயன்றார்கள்.பரம்பொருளினின்று வெளிப்படும் ஒவ்வொரு சக்தியையும் அதனதன் தத்துவங்களை விளக்கும் விதமாக வடிவங்களாகப் படைத்தார்கள். அந்த வடிவங்கள் அனைத்தும் தத்துவ விளக்கங்களாகும். நாம் அந்தத் தத்துவங்களை மறந்து விட்டோம். வடிவங்களை மட்டும் ஆராதிக்கிறோம். அதனதன் தத்துவங்களை உணர்ந்து கொண்டேமேயானால் இல்லை என்று சொல்லி கேள்வி கேட்பவர்களுக்கு இருக்கிறார், ஆனால், எப்படி இருக்கிறார் என்று நம்மால் விளக்கிச் சொல்ல முடியும்.
விஞ்ஞானம் சொல்வதற்கும், நம் வேதங்கள் சொல்வதற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. நமது இந்த அண்டசராசரம் என்பது பல நடசத்திர மண்டலங்களை உள்ளடக்கியது. ஒரு நட்சத்திர மண்டலம் என்பது பல சிறியதும், பெரியதுமான நட்சத்திரங்கள், கிரகங்கள், உபகிரகங்களை உள்ளடக்கியது. நாம் வாழும் சூரிய மண்டலமும் இப்படிப்பட்ட ஒரு நட்சத்திர மண்டலத்தில் ஒரு சிறிய பகுதியாகும். நமது சூரிய மண்டலம் இருக்கின்ற நட்சத்திர மண்டலத்தை பால்வீதி மண்டலம் என்று விஞ்ஞானமும், ஆகாய கங்கை என்று வேதங்களும் குறிப்பிடுகின்றன. இந்த பால்வீதி மண்டலத்தின் மையப்பகுதி பிரகாசமாக ஜொலித்துக் கொண்டிருப்பதாகவும், அதிலிருந்து நட்சத்திரங்கள் புதிது புதிதாகத் தோன்றிக் கொண்டிருப்பதாகவும் விஞ்ஞானம் சொல்கிறது. அந்த மையப்பகுதியையே கோடி சூரியப் பிரகாசம் கொண்ட சகுணப் ப்ரம்மம்(ப்ரம்மா) என்று வேதங்கள் குறிப்பிடுகின்றன. வேதங்கள் சொலவதென்னவென்றால் இந்த ஆகாய கங்கையானது இந்த கோடி சூரியப் ப்ரகாசமான மையப்பகுதியில் இருந்து விரிவடையவும், ஒடுங்கவும் செய்கின்றன என்கிறது.
இதை பகவத் கீதை உறுதிப்படுத்துகிறது. பகவத் கீதை அத்யாயம் 8, சுலோகம் 17, 18ல் சொல்லப்படுவது என்னவென்றால், ஆயிரம் யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு பகல் என்றும், ஆயிரம் யுகங்கள் ப்ரம்மாவுக்கு ஒரு இரவு என்றும், அறிந்து கொள்பவர்கள் ப்ரம்மத்தின் தத்துவத்தை அறிந்தவர்கள் ஆகின்றனர் என்பதாகும். அதாவது ஆயிரம் யுகங்கள் விரிவடைகின்ற ஆகாய கங்கை முடிவில் அந்த ப்ரகாசமான மையத்தில் (ப்ரம்மத்தில்) ஒடுங்கி விடுகின்றன. பிறகு ஆயிரம் யுகங்கள் ஒடுக்க நிலையில் இருந்து விட்டு மீண்டும் விரிவு நிலையான தோற்றத்திற்கு வருகின்றன என்பதாகும் கருத்து. விரிவடையும் ஆயிரம் யுகங்கள் ப்ரம்மாவிற்கு பகல். ஒடுங்குவது ப்ரளயம். ஒடுக்கத்தில் நிலை பெற்றிருக்கும் ஆயிரம் யுகங்கள் ப்ரம்மாவிற்கு இரவு. இந்த இரண்டாயிரம் யுகங்கள் ப்ரம்மாவுக்கு ஒரு நாள். இப்படிப்பட்ட ப்ரம்மாவுக்கு வயது நூறு. இதைப் போலவே நம் ஆகாய கங்கைக்கு அப்பால் அண்டத்திலுள்ள அத்தனை நட்சத்திர மண்டலங்களிலும் தோற்றமும் ஒடுக்கமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ப்ரம்மாவின் நூறு வயது பூர்த்தியாகும் பொழுது அத்தனை நட்சத்திர மண்டலங்களும் பேரண்டத்தின் மையப்பகுதியிலுள்ள நிர்குணப்ரம்மத்தில் ஒடுங்கி விடுகின்றன. இது மகாப்ரளயமாகும்.
இது ஏதோ விட்டலாச்சாரியாரின் கதை போலத் தோன்றலாம். ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே அண்டங்கள், நட்சத்திர மண்டலங்கள், அவற்றின் தோற்றம் ஒடுக்கம் பற்றி வேதம் சொல்லி வைத்திருக்கிறது. சிலர் வேத காலம் என்று ஒன்றைச் சொல்லி வேதத்திற்கு வயது நிரணயம் செய்கிறார்கள். ஆனால், ஒன்றை மனதில் கொள்ள வேண்டும், வேதத்தை வியாசர் படைக்கவில்லை, தொகுத்தார் என்பதே புராணம். எனில், அவருக்கு முன்பாகவே வேதம் இருந்திருக்கிறது. அவ்வாறு உலகெங்கிலும் பரவிக் கிடந்த வேதத்தையே வியாசர் தொகுத்தளித்தார் என்பது தெளிவு. இந்தப் ப்ரளயத்திற்கு ஆதாரமாக நம் வாழ்வையே எடுத்துக் கொள்ளலாம். தினந்தோறும் நாம் பகலில் விழித்திருக்கிறோம், இரவில் உறங்கி விடுகிறோம். இதற்கிடையே நமக்குள்ளும், வெளியேயும் எத்தனையோ பொருட்கள் தோன்றவும், அழியவும் செய்கின்றன. இதை விஷ்ணு புராணம் நித்தியப் ப்ரளயம் என்கிறது. ஆகாய கங்கையின் ஒடுக்கத்தை நைமித்திகப் ப்ரளயம் என்றும், மொத்த நட்சத்திரமண்டலங்களும், ப்ரம்மாக்களும் நிர்குணத்தில் ஒடுங்கும் மகா ப்ரளயத்தை அது ப்ரகிருதி லயம் என்றும் குறிப்பிடுகின்றது.
இவ்வாறு இந்த அண்ட சராசரங்கள் அனைத்தும் தோன்றவும், ஒடுங்கவும் செய்கின்ற அந்த மையமே கடவுள் நிலை என்பதே வேதங்கள் கூறும் உண்மை கருத்தாகும். இதை பகவத் கீதை அத்தியாயம் 8, சுலோகம் 19, 20, 21 ல் ''ப்ரம்மாவின் இரவில் பொருட்கள் தன்வசமின்றி ஒடுங்குகின்றன. பகலில் அவை வெளிப்படுகின்றன. இந்த அவ்யக்த நிலையைக் காட்டிலும் மேலான அவ்யக்த நிலை ஒன்று உள்ளது. இந்த அண்டமெல்லாம் அழியும் பொழுதும் அது நிலைத்திருக்கின்றது. அதுவே பரமகதியாகும்'' என்று சொலப்பட்டுள்ளது. இன்று விஞ்ஞானமும் நம் வேதங்கள் கூறிய கருத்துக்களை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது. கடவுள் துகளைக் கூட கண்டு பிடித்து விட்டதாகச் சொல்கிறார்கள். கடவுளைக் கூட கண்டு பிடித்து விடுவார்கள். இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஏனெனில் அதுதான் நம் மனிதப் பிறவியின் நோக்கம் என்றே வேதம் குறிப்பிடுகிறது. ஆனால், அன்று இந்த அண்டமே மகா ப்ரளயத்தில் ஒடுங்கியிருக்கும். நாமும் கூட...............

YOGA HISTORY - யோகா பற்றிய வரலாறு. -இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகள்



பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, இன்றும் சூட்சமமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்ச்சித்தர்கள் தம்மை சுற்றி நடக்கும் இயற்கை நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கின்றனர்.

ஒவ்வொரு விலங்குகளும், பறவைகளும் மற்றும் பிற உயிரினங்களும் தங்களுக்கே உரிய இருக்கை நிலைகளை ( Resting Position / Posture ) கொண்டு இயங்குவதை காண்கின்றனர்.

இவ்வாறு பல இருக்கை நிலைகளை கவனித்து பட்டியலிடுகின்றனர்.பிறகு இந்த இருக்கை நிலைகள் ஒவ்வொன்றிலும் தங்கள் உடலை அமைத்து பார்க்கின்றனர்.நாளடைவில் உடல் நலம் நன்கு மேம்படுகின்றது.இதனையே இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகளாக வடிவமைக்கின்றனர்.இவையே பிற்காலங்களில் யோகாசனங்கள் மற்றும் பிரணாயாமங்கள் எனப்படுகின்றன.

இந்த வகையில் மயிலை அடிப்படையாக கொண்டு அமையும் ஆசனம் மயூராசனம் ஆகும்.வடமொழியில் மயூரா என்றால் மயில் ஆகும்.இதை போன்றே பிற உயிரினங்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்களின் பட்டியலை கீழே காணலாம்.

ஒவ்வொரு ஆசனத்தின் அருகிலும் அதற்கு அடிப்படையான வடமொழி சொல்லும், அதன் தமிழ் பொருளும் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

மகராசனம் (மகரம்–முதலை), சலபாசனம் (சலபம் – வெட்டுக்கிளி), சசாங்காசனம் ( சசாங்கம் – முயல் ), மச்சாசனம் ( மச்சம் – மீன் ), கூர்மாசனம் ( கூர்மம் – ஆமை ),புஜங்காசனம் ( புஜங்கம் – பாம்பு ),
பாகாசனம் ( பாக – கொக்கு ),
பேகாசனம் ( பேக – தவளை ),
குக்கூட்டாசனம் ( குக்கூடம் – சேவல் ),
சிம்மாசனம் ( சிம்மம் – சிங்கம் )
உஷ்ட்ராசனம் ( உஷ்ட்ரா – ஒட்டகம் ),
கபோடாசனம் ( கபோடா- புறா )

இதைப் போன்று மரம் மற்றும் மலர்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்கள் :

பத்மாசனம் ( பத்மா – தாமரை மலர் ),
விருட்சாசனம் ( விருட்சம் - மரம் )

பிறகு அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை அடிப்படையாகக் கொண்டும் ஆசனங்களை வடிவமைக்கின்றனர்.அவற்றுள் சில பின்வருமாறு,

நாவாசனம் ( நாவா – படகு ), தனுராசனம் ( தனுரா-வில் ),
ஹலாசனம் ( ஹலா- கலப்பை ),
துலாசனம் ( துலா – தராசு )
சக்கராசனம் ( சக்கரா- சக்கரம் ),
தண்டாசனம் ( தண்டா – கம்பு,தடி )

இதே போன்று சில உயிரினங்களை அடிப்படையாக கொண்டு, மூச்சு பயிற்சிமுறைகளையும் வடிவமைக்கின்றனர்.இவ்வாறாக முற்றிலும் இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகளை தமிழ் மொழியில் தொல் தமிழர்கள் வடிவமைத்தனர். இதனை நீண்ட உடல் நலத்திற்காகவும்,உடலில் ஏற்படும் நோய்களை தீர்க்கும் பொருட்டும் அன்றாடம் பயிற்சி செய்து வந்துள்ளனர்.

இப்பழக்கம் பின்னர் சில ஆயிரம் ஆண்டுகள் வரை கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.அதன் பிறகு காலப்போக்கில் கடல்கோள்கள் போன்ற இயற்கை சீற்றங்களாலும்,ஆட்சி மாற்றங்களாலும் இந்த வழக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றது.

பின்னர் ஒரு காலகட்டத்தில் சமஸ்கிருத மொழி செல்வாக்கு பெற்றிருந்த வேளையில் ( இன்றைக்கு ஆங்கிலம் செல்வாக்கு பெற்றிருப்பதை போல ) இந்த இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள் சமஸ்கிருத மொழியில் அதிகமாக பதிவு செய்யப்படுகின்றன.இவ்வாறு சமஸ்கிருத மொழியில்இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் என பெயர் பெறுகின்றன.

இனி இந்த யோகாசனங்கள் வரலாற்றில் எவ்வாறெல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளன என காணலாம்.

தமிழ்நாட்டில் அகத்தியர்,திருமூலர்,பதஞ்சலி உள்ளிட்ட பதினெட்டு சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.இவர்கள் எழுதிய நூல்களில் யோகாசனங்களை பற்றிய செய்திகளை காணலாம்.

இதில் பதஞ்சலி முனிவர் வடநாட்டுக்கு சென்று யோக சூத்திரம் என்ற நூலை எழுதுகின்றார்.இது எட்டு உறுப்புகளை கொண்டதால் அஷ்டாங்க யோகா என அழைக்கப்படுகின்றது.

பிறகு 15 ஆம் நூற்றாண்டில், யோகி ஸ்வாத்மராமா என்பவர் ஹத யோகா பற்றிய நூலை எழுதுகின்றார்.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சுவாமி விவேகானந்தர் மேற்கு நாடுகளில் ராஜ யோகம் பற்றி விளக்குகின்றார்.

இதனைத் தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் அரவிந்தர், சுவாமி சிவானந்தர் போன்றோர் ஆன்மீக ரீதியிலான யோகாவை பரப்புகின்றனர்.

1920 களில் மைசூர் மாகாணத்தை சேர்ந்த திருமலை கிருஷ்ணமாச்சார்யா எனும் யோக நிபுணர் ஆரோக்கிய ரீதியிலான யோகாவை வடிவமைக்கின்றார்.பல்வேறு நோய்களுக்கும் இயற்கை உணவு +மருந்து + யோகாசனங்கள் அமைந்த சிகிச்சை திட்டங்களை தீட்டி நோய்களை குணப்படுத்துகின்றார்.இம்முறை பின்னர் பல்வேறு யோக ஆசிரியர்களாலும் கடைபிடிக்கப்படுகின்றது.

1980 களில் டீன் ஆர்னிஷ் ( Dean Ornish ) எனும் அமெரிக்க மருத்துவ நிபுணர், யோகாவின் மூலம் இருதய நோய்கள் குணமடைவதை மருத்துவ ஆய்வுகள் மூலம் நிரூபிக்கின்றார்.சுவாமி சச்சிதானந்தாவிடமிருந்து இவர் யோகாவை கற்றவராவார்.

இதன் பிறகு மேற்கு நாடுகளில் யோகாவை பற்றிய விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இன்றைய நிலையில் தமிழ் வழி யோகா என்பது இல்லை.நாம் இன்று பெறக்கிடைப்பது வட நாட்டு யோகா ஆகும்.வருங்கால ஆராய்ச்சிகள் முற்றிலும் இயற்கை சார்ந்த, அனைவருக்கும் பொதுவான தமிழ் வழி யோகாவை உருவாக்கும் என நம்புவோமாக.

யோகா செயல்படும் விதம் :

யோகா பயிற்சிகளின் போது தொடர்புடைய பகுதிகளில் இரத்த ஒட்டம் அதிகரிக்கின்றது.இதனால் ஊட்டச்சத்துக்களும்,ஆக்ஸிஜனும் தேவையான அளவு செல்களுக்கு கிடைப்பதால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கின்றது.இதனால் உள்ளுறுப்புகள் நன்கு இயங்குகின்றன.

பொதுவாக உடல் முழுமைக்குமான யோகா பயிற்சிகளை செய்யும் போது, இரத்த ஒட்டம் நன்கு உறுதி செய்யப்பட்டு உடலின் ஆரோக்கியம் தொடர்ந்து அதிகரிக்கின்றது.

உடல் முழுவதும் பரவியுள்ள நரம்பு மண்டலமும் சீரான நிலையில் வைக்கப்படுகின்றது.

நம் சுவாசத்திற்கும், எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.கோபம், கண்ணீர்,அதிக சந்தோஷம் போன்ற உணர்ச்சி வசப்பட்ட தருணங்களில் நாம் வேகமாக மூச்சு விடுவோம்.அதாவது அந்த நிலையில் நம் மனதின் எண்ண ஒட்டங்கள் அதிகமாக இருக்கும்.

மாறாக அமைதியான தருணங்களில் ஆழ்ந்து மூச்சு விடுவோம்.அதாவது தெளிவான எண்ண நிலையில் இருப்போம்.

இந்த அடிப்படையில் மூச்சு பயிற்சி, நம் சுவாசத்தை ஆழப்படுத்தி அமைதியான எண்ணங்களை நிலை கொள்ளச் செய்யும்.இது உளவியல் ரீதியாக மிகுந்த பலனை நமக்கு தரும்.

யோகா பற்றிய குறிப்புகள் :

• யோகாசனங்கள் எப்பொழுதும் இருபக்க சமச்சீரானவை.முதலில் இடது பக்கம் செய்யப்படும் அசைவுகள்,அடுத்ததாக வலது பக்கமும் அதே அளவு செய்யப்படும்.இந்த அடிப்படையில் பார்க்கும்போது இரண்டு கைகளையும் சமமாக பயன்படுத்தும் பழக்கம் தொல் தமிழர்கள் வாழ்வில் இருந்திருக்க வேண்டும்.இது மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்.

• ஒவ்வொரு ஆசனத்திலும், ஆரம்ப நிலையில் தொடங்கி ஒவ்வொரு நிலையாக கடந்து இறுதி நிலையை அடைய வேண்டும்.பிறகு அதே படிவரிசையில் ஆரம்ப நிலையை அடைய வேண்டும்.அதாவது 1-2-3-4-5 என்றவாறு ஆசனத்தின் இறுதி நிலையை அடைந்தபின் 5-4-3-2-1 என்றவாறு ஆரம்ப நிலைக்கு திரும்ப வேண்டும்.இதுவே உடலின் பாதுகாப்பை உறுதி செய்யும்.மீறினால் சுளுக்கு,தசைபிடிப்பு ஏற்படலாம்.

• ""''ஸ்திரம் சுகம் ஆசனம்" என்ற அடிப்படையில் பயிற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.முதலில் உடல் ஆடாமல் நிலையாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.பிறகு வலியில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.பிறகு இறுதி நிலையை முயற்சிக்க வேண்டும்.இதற்கு உரிய நாட்களை எடுத்து கொள்ளவேண்டும்.சில ஆசனங்களை செய்வதற்கு பல மாதங்கள் கூட ஆகலாம்.மாறாக அவசரப்பட்டால் தவறு நேரலாம்.

• கீழ்நோக்கிய அசைவுகள் மூச்சு விட்டுக் கொண்டே செய்யப்படும்.மேல்நோக்கிய அசைவுகள் மூச்சை இழுத்துக் கொண்டே செய்யப்படும்.இந்த வகையில் யோகப்பயிற்சிகள் புவியீர்ப்பு விசையை கருத்தில் கொண்டவை.

யோகாவின் இன்றைய அவசியங்கள் :

இன்றைய நிலையில் நமது வாழ்வில், உடலுழைப்பு குறைந்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம். இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள், சிறுநீரக கோளாறு, அல்சர், முதுகு வலி, இடுப்பு வலி, மூட்டு வலி என பல்வேறு நோய்களை சந்தித்து வருகின்றோம்.

பொருளாதார நெருக்கடி, அவசரம் , பதற்றம் காரணமாக பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாகி வருகின்றோம். இதனால் நம்முடைய மன நலமும் குறைகின்றது.இதனால் சமூகத்தில் உளவியல் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன.

இவற்றுக்கெல்லாம் தீர்வாக நம் முன்னோர்கள் வழியில், நாமும் யோகாவை தினசரி வாழ்வின் அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
தினசரி அரைமணி நேரமாவது யோக பயிற்சிகளை செய்யலாம்.இயலாதவர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது செய்ய முயற்சிக்கலாம்.

இதன் மூலம் உங்கள் உடல் நலமும்,மனநலமும் மேம்படுவது உறுதி.நீண்ட காலம் தொடர்ந்து செய்தால் நோய்கள் குறைந்து ஆரோக்கியமாக வாழலாம்.இது சமூகத்தில் இணக்கத்தை ஏற்படுத்தி அமைதிக்கு வழி வகுக்கும்.குடும்பத்தில் ஒருவர் யோக பயிற்சிகள் செய்யும்போது, இந்த பழக்கம் குழந்தைகள்,இளைஞர்களிடமும் பரவும்.
எல்லோரும் இன்புற்று வாழலாம்.

ஒரு முக ருத்ராட்சம்..!



பல வகை ருத்ராட்சங்களில் ஒரு முக ருத்ராட்சம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.
ஒரு முக ருத்ராட்சம் உருண்டை வடிவம் கொண்டது.
ஆனால் இன்று 'சந்திரகர்' என்னும் பிறை வடிவ ருத்ராட்சத்தை ஒரு முக மணி என்று பலர் அணிந்து வருகின்றனர். சந்திரகர் ருத்ராட்சமும் சிவனின் அருள் பெற்றதால, அதை அணிந்து கொள்ளவோ பூஜை அறையில் வைத்து வணங்கவோ செய்யலாம். இருப்பினும் ஒரு முக ருத்ராட்சம் இந்த மணியிலிருந்து வேறுப்பட்டது. ஒரு முக ருத்ராட்சதில் ஒரு கோடு காணப்படும்.
நேபாள ஒரு முக ருத்ராட்சம் உருண்டை வடிவிலும், இந்தோனேசிய ஒரு முக ருத்ராட்சம் அரிசியை போல சற்று நீள வடிவிலும் காணப்படும்.
ஒரு முக ருத்ராட்சம் சூரியனின் ஆதிக்கம் பெற்றது. இதை அணிவதால் ஜாதகத்தில் சூரியனால் ஏற்படும் பாதகங்களை நீக்கும். இது பரப்பிரம்ம ஸ்வரூபம் ஆகும். இதன் அதி தேவதை ஸ்ரீ பரமேஸ்வரன்
ஆவார். இது இருக்கும் இடத்தில மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.
ஒரு முக ருத்ராட்சத்தை 'பிரமஹத்தி' தோஷத்தை (பிராமணரை கொன்ற பாவம் ) நீக்கும். புலன்களை வெல்லும். பிரம்ம ஞானத்தை கொடுக்கும். மோட்சத்தை அளிக்கும்.
இதை அணிபவர்களின் மனம் ஒருமைப்படுவதோடு, பூரண அமைதியை அடையும். ஒரு முக ருத்ராட்சம் உலகாயதச் செல்வங்களையும், ஆன்மீகச் செல்வங்களையும் அளிக்கும் ஆற்றல் பெற்றதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.
இவ்வகை மணி மிக அபூர்வமாகவே கிடைக்கும் என்பதால், விலை அதிகமாகவிய இருக்கும்.
யார் அணியலாம்:
தலமைப் பதவியை விரும்புபவர்கள் ஒரு முக ருத்ராட்சத்தை அணிந்தால் அப்பதவி தானாக தேடி வரும். அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், அதிகாரிகள் இதை அணிந்து வந்தால் உயர்நிலையை எட்டிபிடிப்பர்கள்.
இவை தவிர புகைப்பழக்கம், மது அருந்துதல்,போதை மருந்து.போன்ற தீய பழக்கங்களில் இருந்து விடுப்பட விரும்புபவர்கள் இதை அணிந்தால், அவர்களின் உடலும் மனமும் நல்ல மாற்ற பெரும். தீய பழக்கங்கள் அறவே ஒழியும்.
தலைவலி, பார்வைக்கோளாறு, மூலநோய், சரும வியாதிகள்,கல்லீரல் நோய்களைக் குணமாக்கும் ஆற்றலும் ஒரு முக ருத்ராட்சதிர்க்கு உண்டு.
ஒரு முக ருத்ராட்சம் போலி என்று தெரியவந்தால் ஆறு குளம், கடலில் போட்டு விடுவதுசிறந்தது. காரணம் பல எதிர்மறை விளைவுகளை அது உண்டாக்கலாம்.
ருத்ராட்சமும் ஜோதிடமும்':
இது சூரியனின் ஆதிக்கம் பெற்றது. ஜாதகத்தில் சூரிய ஆதிக்க குறைவால் ஏற்படும் தீய பலன்களான வலது கண் நோய், தலை வலி, வயுட்ட்று வலி, எலும்பு பலவீனங்கள், போன்ற நோய்கள் ஒருமுக மணியை அணிவதால் நீங்கும்.
இது தவிர மனரீதியாக தன்னம்ம்பிக்கை குறைவு, தலமைப் பதவியை விரும்புபவர்கள், வளம் குன்றியிருத்தல், ஆளுமைஇன்மை போன்ற குறைபாடுகளும் இதை அணிவதால் நீங்கும் .
ஒரு முக ருத்ராட்ச மந்திரம்..
ஓம் ஹ்ரீம் நமஹ :

Thursday, December 25, 2014

The World Unknow Secerets in INDIA







    
                                                             சாந்தி தேவி

சாந்தி தேவி 1930-களில், டெல்லியை சேர்ந்த 4 வயதான சாந்தி தேவி என்ற குழந்தை, தான் இதற்கு முன் மதுராவில் வாழ்ந்ததாக தன் பெற்றோர்களிடம் கூறியுள்ளது. தான் 3 குழந்தைகளுக்கு தாய் என்பதையும் ஒரு பிரசவத்தின் போது இறந்து விட்டதாகவும் கூறியுள்ளது. இதற்கு முன் தன் பெயர் லுட்கி எனவும் கூறியுள்ளது. இதனை கேட்ட அவளின் பெற்றோர்கள் விசாரணையில் இறங்கிய போது, மதுராவில் லுட்கி என்ற பெண் சமீபத்தில் இறந்தது தெரிய வந்தது. சாந்தி தேவியை அந்த கிராமத்திற்கு அழைத்து சென்ற போது, அவள் உள்ளூர் மொழியில் சரளமாக பேச தொடங்கினால். தன் பூர்வ ஜென்ம கணவன் மற்றும் குழந்தைகளை அடையாளம் கண்டால். இதனை கேள்விப்பட்ட மகாத்மா காந்தி, இதனை விசாரிக்கும் படி ஒரு குழு ஒன்றை நியமித்தார். அதன் படி 1936 ஆம் ஆண்டு ஒரு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் படி அப்பெண் லுட்கியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களில் இருந்து 24 சரியான தகவல்களை அளித்துள்ளார்.

-----------------------------------------------------------------------------------------------------------------
ப்ரஹ்லாத் ஜானி
 
 

  மாதாஜி என்றழைக்கப்படும் ப்ரஹ்லாத் ஜானி, 1940 ஆம் ஆண்டு முதல் தண்ணீர் மற்றும் உணவருந்தாமல் வாழும் ஒரு துறவியாகும். தனக்குள் கடவுள் இருப்பதாக அவர் கூறுகிறார். அவரை வைத்து இரு முறை சோதனை ஆய்வுகள் நடைப்பெற்றுள்ளது. 2010-ல் நடந்த அந்த இரண்டாம் ஆய்வில், தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு அவர் 24 மணிநேர வீடியோ கண்காணிப்பில் வைக்கப்பட்டார். இந்த 15 நாட்களுக்கு அவரின் ஆரோக்கியத்தை 35 விஞ்ஞானிகள் கண்காணித்து வந்தனர். ஆனாலும் அவர் தண்ணீர் மற்றும் உணவருந்தியதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை. இந்த 15 நாட்கள் முடியும் வரை அவருடைய உடலில் பசி அல்லது நீர்ச்சத்து குறைவதால் ஏற்படும் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. யோகா உடற்பயிற்சிகளால் அவரின் உடல் இப்படி மாறியிருக்கலாம் என ஒரு காரணம் கூறப்படுகிறது. இரண்டு வாரம் உண்ணாமல் இருந்த பிறகு அவர் 40 வயது மனிதனை விட ஆரோக்கியமாக இருந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
--------------------------------------------------------------------------------------------------------------------
 
ஓம் பன்னா
  
    

ஓம் பன்னா என்பது ஜோத்பூரில் உள்ள பாளி மாநகராட்சியில் உள்ள மோட்டார் பைக் கோவிலாகும். பாதுகாப்பான பயணத்திற்கு இங்குள்ள 350 சிசி ராயல் என்ஃபீல்ட் புல்லட்டை தான் கடவுளாக அனைவரும் வழிபடுகின்றனர். 1988 ஆம் ஆண்டில் ஓம் பன்னா தன் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த போது ஒரு மரத்தில் மோதி அங்கேயே இறந்துள்ளார். மறுநாள் காலை அந்த பைக்கை காவலர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். ஆனால் மறுநாள் அந்த பைக் விபத்து நடந்த பகுதியில் இருந்துள்ளது. அதனை மீண்டும் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்த காவலாளிகள் பைக்கில் இருந்த பெட்ரோலை எடுத்து விட்டு, அதனை சங்கிலியால் கட்டி போட்டு வைத்துள்ளனர். ஆனால் மீண்டும் அது மாயமாகி, விபத்து நடந்த பகுதிக்கு சென்றுள்ளது. இது பல தடவை நடந்திருக்கிறது. அதிசயமாக பார்க்கப்பட்ட இச்சம்பவத்தால் அனைவரும் அந்த பைக்கை வணங்க தொடங்கினர். அன்றாடம் அந்த பாதையை கடப்பவர்கள் அந்த பைக்கையும் ஓம் பன்னாவையும் வணங்கி விட்டு தான் செல்கின்றனர். சில ஓட்டுனர்கள் மதுபானத்தையும் அதற்கு படைக்கின்றனர்.
=======================================================================

ரூப்குந்த் ஏரி - உத்தர்கண்ட்

  

உள்ளூர்வாசிகளால் மர்ம ஏரி என அழைக்கப்படும் ரூப்குந்த் உறைபனி ஏரி உத்தர்கண்ட் மாநிலத்தில் உள்ளது. யாருமே வசிக்காத இந்த பகுதி, இமயமலையின் மீது 5,029 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. 2 மீட்டர் ஆழத்தை கொண்டுள்ள இந்த ஏரியின் முனையில் நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகளை காணலாம். ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் இதனைப் பற்றி பல கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது. அதன் படி, 9-ஆம் நூற்றாண்டிற்கு முன்பிலிருந்தே இவை இங்கு கிடக்கிறது. இந்த எலும்புகளின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகம் ஆராய்ந்த போது அது 850 ஆம் வருடத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது. ஆனால் எதுவும் உறுதியாக தெரியவில்லை.

கம்பியூட்டர் அதிகம் ஹேங்ஆகுதா


கணிணியை தொடர்ந்து பயன்படுத்தினால் அதன் வேகம் குறைவது அனைவரும் அறிந்ததே. நாம் ஒரு புது லேப் டாப் அல்லது டெஸ்க்டாப் கம்பூடர் வாங்கும் போது இருக்கிற வேகம், சிறிது நாள் கழித்து இருக்கிறது இல்ல.

இதுக்கு காரணம், கம்பியூட்டரில் இன்ஸ்டால் பன்னி இருக்க அப்ளிகேஷன்ஸ், டிஸ்க் ஸ்பேஸ் இவை அதிகமாகி இருக்கலாம். அடுத்தது வைரஸ் வந்து இருக்கலாம். இல்ல, உங்க கம்பியூட்டருக்கு மெய்ண்டனன்ஸ் தேவைப் படலாம்.

இது பலருக்குத் தெரிந்திருக்கும், தெரியாதவர்களுக்காக இந்த குறிப்புகள்…
Maintanance Task

இது ஒரு சிம்பில் விஷயம் தான். உங்க கண்ட்ரோல் பேனல்ல

 Troubleshoot ->System Security -> Run maintenance task

கிளிக் பன்னா மெய்ண்டனன்ஸ் டாஸ்க்ஸ் ரன் ஆகும். இது முடிந்ததும், உங்கள் கம்பியூட்டர் கொஞ்சம் வேகமானதை நீங்கள் உணர முடியும்.

Defragmentஇதுவும் பலருக்கு தெரிந்தது தான். ஹார்ட் டிஸ்கில் நாம் சேமித்து வைத்திருக்கும் தகவல்கள் ஒழுங்கில்லாமல் சேவ் ஆகும்.இதை ஒழுங்கு படுத்தும் முறை தான் Disk Defragment.

இதுக்கு Searchல, Disk Defragmentனு டைப் செய்தால் Disk Defragment டயலாக் பாக்ஸ் ஓபன் ஆகும்.இதில் வரிசையாக கம்பியூடரில் உள்ள டிரைவ்கள் தெரியும்.இதில் ஒவ்வொரு டிரைவாக கிளிக் செய்து, முதலில் Analyze பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.Analayze முடிந்தவுடன் Optimize பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

இந்த Defragment-ஐ Auslogics Disk Defragn என்ற அப்ளிகேஷனைக் கொண்டும் செய்யலாம்.இந்த அப்லிகேஷன் Defragment-ஐ விண்டோஸை விட வேகமாகச் செய்யும்.இதே போல் Disk Clean Up என்கிற விண்டோஸ் வசதி மூலம் தேவையில்லாத தகவல்களை அழித்து உங்கள் ஹார்டிஸ்கில் இடத்தை பெற முடியும்.இதையும் Searchல் டைப் செய்தால்Disk Clean Up என்கிற விண்டோ ஓபன் ஆகும்.

அதில் எந்த டிரைவில் கிளீன் அப் செய்ய வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து OK கொடுத்தால் எவற்றை எல்லாம் அழிக்கலாம் என்ற பட்டியல் தோன்றும்.அதில் தேவையற்றவற்றை மார்க் செய்து டெலிட் கொடுத்தால் உங்களுக்கு சிறிதளவு நினைவகத்தில் இடம் கிடைக்கும்.
இவை அனைத்தையும் அடிக்கடி செய்து வந்தால் உங்கள் கணிணியின் வேகத்தில் ஓரளவு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

அதென்ன 10 பத்து ஜோதிடம் பொருத்தம்............?



திருமணப் பேச்சை ஒரு வீட்டில் ஆரம்பித்து விட்டால் முதலில் பார்ப்பது ஜாதகத்தை தான். அதிலும், 10 பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பார்கள். ஜோதிடர் வரன்கள் இருவரது ஜாதகத்தை கணித்து உத்தமம் என்று சொன்னால் தான் மேற்கொண்டு பேசுவார்கள். இல்லையென்றால், அடுத்த ஜாதகத்திற்கு தாவி விடுவார்கள்.

அதென்ன பத்து பொருத்தம்?

ஜோதிடர் ஏதோ சொல்கிறார், நாங்களும் கேட்கிறோம் என்று தான் இந்த கேள்விக்கு நம்மில் பலர் பதில் சொல்வார்கள்.
நீங்களும் அந்த பத்து பொருத்தம் என்னவென்று அறிய வேண்டாமா?

1. தினப் பொருத்தம் : இதை நட்சத்திர பொருத்தம் என்றும் சொல்வார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ள இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.

2. கணப் பொருத்தம் : இது தான் குணத்தை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பொருத்தம். மனைவியாக வரப்போகிறவள், கணவனாக வரப்போகிறவன் எத்தகைய குணத்தை பெற்றிருப்பான் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

3. மகேந்திரப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இந்த பொருத்தம் இருந்தால் தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதனால் இந்த பொருத்தம் ரொம்பவே முக்கியம்.

4. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான், திருமணம் செய்பவர்கள் வாழ்வில் செல்வம் கொட்டும். அதனால், இதுவும் முக்கியம் தான்.

5. யோனிப் பொருத்தம் : இது மிக, மிக முக்கியமான பொருத்தம். கணவன்-மனைவி இருவரும் தாம்பத்திய வாழ்க்கையில் எந்த அளவுக்கு திருப்தியாக இருப்பார்கள் என்பதை சொல்லக்கூடியது இது. அதனால், இந்த பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

6. ராசிப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். அதாவது, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும்.

7. ராசி அதிபதி பொருத்தம் : குடும்பம் சுபிட்சமாக-சந்தோஷமாக இருக்குமா என்பது தெரிவிக்கக்கூடியது இந்த பொருத்தம்.

8. வசிய பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவன்-மனைவிக்குள் ஒரு ஈர்ப்பு ஏற்படும். இல்லையென்றால் சண்டைக்கோழி தான்.

9. ரஜ்ஜூப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவனுக்கு ஆயுள் பலம் உண்டாகும். பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை உறுதி செய்யும் இந்த பொருத்தம் இருப்பது மிக மிக அவசியம்.

10. வேதைப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் தம்பதியர் வாழ்வில் சுக துக்கங்கள் எந்த அளவில் இருக்கும் என்பதை கணிக்கக்கூடியது இந்த பொருத்தம். இந்த பொருத்தம் ஓ.கே. என்றால் தான், பின்னாளில் வாழ்வில் பிரச்சினைகள் அதிகம் இருக்காது.

இந்த பத்து பொருத்தங்கள் எல்லோருக்கும் வாய்ப்பது மிகவும் கடினம். இவற்றில் தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜூ ஆகிய 5 பொருத்தங்கள் தான் மிகவும் முக்கியமானவை என்கிறார்கள் ஜோதிட வல்லுனர்கள்.

பத்து பொருத்தம் பற்றி ஜோதிடம் இப்படிச் சொன்னாலும், அதே ஜோதிடம் இன்னொரு பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொல்கிறது. அது தான் மனப் பொருத்தம். மனப் பொருத்தம் இருந்தால் மாங்கல்ய பொருத்தம் உண்டு என்பது ஜோதிட கருத்து. இதை பலர் கண்டு கொள்வதே இல்லை.

பத்து பொருத்தங்களை பார்க்கும் நாம் மனப் பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். அதாவது, திருமணம் செய்யப்போகும் பெண்ணுக்கு ஆணை பிடித்திருக்கிறதா என்றும், ஆணுக்கு பெண்ணை பிடித்திருக்கிறதா என்றும் கேட்டு உறுதி செய்வது அவசியம். அதன் பின்னர் தான் திருமணத்தை நிச்சயம் செய்ய வேண்டும். இதை ஜோதிட சாஸ்திரமே வலியுறுத்துகிறது.
---------------------------------------------------------------

பெண்களை எளிதில் மடக்குவதற்கு ஆண்கள் கூறும் 5 பொய்கள்!



காதல் குண்டை பயன்படுத்தும் ஆண்கள் கூறும் பொய்களை பற்றி ஒவ்வொரு பெண்ணும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். சரி, காதல் குண்டை பயன்படுத்துவது என்றால் என்ன என்று தானே கேட்கிறீர்கள்? ஒரு பெண்ணை காதல் என்ற உறவில் சிக்க வைக்க அபரிதமான அளவில் அன்பை அவர் மீது பொழிவது தான் காதல் குண்டை உபயோக்கிப்பது. சொல்லப்போனால், மனதை கட்டுப்படுத்தும் இந்த காதல் பாம்மிங் டெக்னிக் அனைத்து வகையான உறவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் காதல் உறவுகளில் அது எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை மட்டுமே நாம் பார்க்கப்போகிறோம்.

ஒரு ஆண் மிகவும் ஆடம்பரமான முறையில் தன் காதலையும், அன்பையும் வெளிப்படுத்தி, அதன் மூலன் அந்த பெண்ணை தன் காதலில் மூழ்கடிக்க முயற்சி செய்தால், கண்டிப்பாக மனதை கட்டுப்படுத்தும் காதல் குண்டிற்கான தெளிவான எச்சரிக்கை அறிகுறியே இது. தங்கள் கைகளில் அந்த பெண் வேகமாக சிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, சிலர் இந்த வழிமுறையை பின்பற்றுவார்கள். அந்த பெண் காதலில் விழுந்து விட்டால், தங்கள் வழக்கமான வழியில் அந்த பெண்ணை திட்ட தொடங்குவார்கள். இதனால் கிடைக்கும் இன்பத்தில் மகிழ்ச்சி கொள்பவராக விளங்குவார்கள். காதல் குண்டை பயன்படுத்துவது என்றால் என்ன என்பது உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும். இனி ஆண்களிடம் இவ்வகையான குணங்கள் இருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? அதைப் பற்றி இனி பார்க்கலாம்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், உங்களின் காதலன் உங்கள் மீது உண்மையிலேயே காதலில் இருக்கிறாரா அல்லது வெறும் காதல் குண்டை மட்டும் பயன்படுத்துகிறாரா என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமாகும். ஏன் என்று கேட்கிறீர்களா? நாம் அனைவரும் காதலுக்காக ஏங்குவோம். அப்படி இருக்கும் போது, திடீரென நம் மீது யாராவது காதலை மழையாக பொழியும் போது, அதற்கான காரணங்களை ஆய்வு செய்யத் தான் நமக்கு தோன்றுமா? கண்டிப்பாக அவ்வகையான நபரின் மீது காதலில் விழுவோம். ஒரு நிமிடம்! காதல் குண்டை பயன்படுத்துவதைப் பற்றி தெரிந்து கொண்டீர்கள்; காதலிப்பதற்கு முன்பு உங்கள் ஆண் காதல் குண்டை பயன்படுத்துகிறாரா என்பதை எப்படி கண்டுப்பிடிக்க வேண்டும் என்று தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது தானே.

இதோ, காதல் குண்டை பயன்படுத்தும் ஆண்கள் கூறும் 5 பொய்கள்:

என் வாழ்க்கையில் உன்னை விட அழகான பெண்ணை நான் இதுவரை கண்டதில்லை

ஒரு பெண்ணை தன் இழுப்பிற்கு ஒரு ஆண் வளைக்க நினைத்தால், அவன் கூறும் முதல் பொய் இதுவாக தான் இருக்கும். தன் அழகை பற்றி ஒரு ஆண் இப்படி புகழும் போது கண்டிப்பாக அந்த பெண்ணிற்கு ஆனந்தமாக தான் இருக்கும். ஆனால் இதில் எல்லாம் மயங்கி விடாதீர்கள்! சிறிது பொறுத்திருந்து பார்க்கவும்.

நீ என்னை புரிந்து கொண்டதை போல் எந்த பெண்ணாலும் முடியாது

இந்த பொய்யை கூறுவதால் உங்களிடம் இருந்து, அவன் மீது ஒரு வகை அனுதாபம் கிடைக்கும். ஒரு ஆணின் உணர்வுகளை தன்னால் மட்டுமே புரிந்து கொள்ள முடிகிறது என்பதை ஒரு பெண் அறிந்தால் கண்டிப்பாக அவள் சிறப்பாக உணர்வாள். மயங்கி விடாதீர்கள் பெண்களே! தன் வாழ்க்கையை உங்களிடம் ஒப்படைக்காதவரை, ஒரு ஆணை புரிந்து கொள்வது உங்கள் கடமை கிடையாது.

என் உலகத்தின் மையமே நீ தான்

ஆண்கள் கூறும் மிகப்பெரிய பொய் இது. பெண்களுக்கு சிறப்பான ஒரு உணர்வை ஏற்படுத்த ஆண்கள் இப்படி கூறுவார்கள். ஒரு ஆண் உங்கள் மீது பைத்தியமாக இருப்பதையும், உங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் என்பதையும் நீங்கள் அறிந்தால், உங்கள் உணர்ச்சிகளை மூட்டை கட்டி வைத்து விட்டு, அந்த நபரின் உண்மையான நோக்கத்தை அலசுவது கண்டிப்பாக கஷ்டமான ஒன்றே. தங்களின் இறுதியான இன்பத்தை பெறும் வரை, ஆண்கள் பெண்களின் மனதை மேக மூட்டத்துடன் வைத்திடவே விரும்புவார்கள். அதனால் அனைத்து வழிகளிலும் அவர் காதலை சோதித்துப் பாருங்கள் பெண்களே!

நீ இல்லாத வாழ்க்கையை வாழ்வதே வீண்

நீங்கள் ஒரு புத்திசாலியான பெண்ணாக இருந்தால், ஏதோ ஒன்று தவறாக உள்ளதே என்று ஆண்கள் கூறும் இந்த பொய்யை வைத்து கண்டுபிடித்து விடுவீர்கள். ஆனால் இந்த பொய்யால் நீங்கள் மயங்கி விட்டீர்கள் என்றால், காதலின் மீது மிக ஆழமான ஏக்கத்தை நீங்கள் கொண்டிருந்திருக்கிறீர்கள். அதேப்போல் இதுவரை பார்த்திருந்த சில உணர்ச்சி ரீதியான தேவைகளையும் கொண்டிருந்திருக்கிறீர்கள் என்பதையே அது உணர்த்தும். காதல் குண்டை பயன்படுத்தும் ஆண்கள் கூறும் மற்றொரு பொய் இது என்பது புரிந்து கொள்ளுங்கள் பெண்களே! இந்த சுயநலமான உலகில், யாரும் யாருக்காகவும் சாவதில்லை. அதனால் அவரிடம் பார்த்து மெதுவாக அணுகவும்.

என்னை காதலிக்கவில்லை என்றால் நான் செத்துவிடுவேன்

இது ஒரு உணர்ச்சி ரீதியான மிரட்டலாகும்; ஆனால் உங்கள் மீதுள்ள காதலால் ஒருவர் உங்களுக்காக சாக கூட தயாராக உள்ளார் என்பது உங்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தினால், நீங்கள் இன்னும் வளரவில்லை என்று தான் அர்த்தமாகும். நீங்கள் இன்னும் பக்குவமடைய வேண்டும். முதலில் காதல் குண்டை பயன்படுத்தும் அவரின் உளவியலைப் புரிந்து கொள்ளுங்கள். இது ஒரு வலை! அவரை நீங்கள் திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தால், மீண்டும் ஒரு முறை யோசித்து பாருங்கள். காதல் குண்டை பயன்படுத்தியதால் உருவான உறவுகள், கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து விடும்.

சரி, உண்மையான காதல் உணர்வுகளை கொண்ட ஒருவன் இப்படி பேசினால் என்ன செய்வது?

உண்மையான காதல் உணர்வுகளுக்கும், காதல் குண்டை பயன்படுத்துவதற்கும் உள்ள பெரிய வித்தியாசமே தீவிரம் தான். மேலும் கால் நேரத்தையும் கருத வேண்டும். பொதுவாக காதல் குண்டை பயன்படுத்துபவர்கள் முதல் சில நாட்களில் நடக்கும் சந்திப்புகளிலேயே மிகைப்படுத்திய காதலை வெளிப்படுத்துவார்கள். உண்மையான காதல் என்றால் மெதுவாகவும், அழகாகவும் நடைபெறும். இதுவே காதல் குண்டை பயன்படுத்துபவர்கள் என்றால், உங்களை ஈர்க்க மிக வேகமாக, கஷ்டப்பட்டு முயற்சி செய்வார்கள். உங்களிடம் இருந்து அவர் ஏதோ ஒன்றை மிக வேகமாக எதிர்ப்பார்க்கிறார் என்பது உங்களுக்கு தெளிவாக தெரியும்.

ஒரு ஆண் உங்களை தொடர்ச்சியாக தொலைப்பேசியில் அழைத்து, மெசேஜ்கள் அனுப்பி, மின்னஞ்சல்கள் அனுப்பி வந்தால், உங்களின் கவனம் அவருக்கு உடனடியாக தேவை என்பதை இது குறிக்கும். காதல் குண்டை பயன்படுத்துபவரின் வலையில் விழுவதை விட உண்மையான காதலுக்காக காத்திருப்பதே மேலாகும். காதல் குண்டை பயன்படுத்தி, பொய் பேசும் ஆண்களிடம் இருந்து உஷாராக இருங்கள் பெண்களே!

21 - 25 வயது பெண்களுக்கு மிகவும் கடினமான வயது...


(திருமணத்திற்கு முன்)


1) காத்திருக்க சொல்லும் காதலனின் முகம் பார்ப்பதா இல்லை, கை காட்டுபவனுக்கு கழுத்தை நீட்டச் சொல்லும் தந்தையின் சொல் கேட்பதா என்ற மனப் போராட்டத்தில் இருப்பீர்கள்.
2) வேலை தேடி அலையும் போதும் , பெண்களெல்லாம் கல்யாண பத்திரிக்கையில் போட்டுக்கொள்ளத் தானே பட்டம் வாங்குனீர்கள் என்று நகைக்கும் ஆண்களையும் ஒற்றைப் புன்னகைச் சிந்தி கடந்து செல்வீர்கள்.
3) மல்லிகை பூவையும் , கண்ணாடி வளையலையும் ,
சுடிதாரையுமே அதிகம் விரும்பினாலும் , வேலைக்கென ஒரு வேடம் போட்டுக் கொள்வீர்கள்.
4) பேசாவிட்டால் உம்மனாமூஞ்சி என்று பெயர் எடுப்பீர்கள். கொஞ்சம் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிட்டாலும் படித்த திமிர் என்ற பட்டம் வாங்குவீர்கள்.
5) சமையலறை பக்கம் கூட சென்று இருக்கமாட்டீர்கள். இப்போது மெல்ல மெல்ல எல்லாம் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருப்பீர்கள்.
6) முகப் பருக்களை கிள்ளுவதையே பகுதி நேர வேலையாக வைத்திருப்பீர்கள்.
7) ஊரைப் பிரிந்து ஏதோ ஒரு பெண்கள் விடுதியில், ஆயிரம் பெண்கள் சூழ்ந்திருக்கையிலும் தனிமையில் இருப்பதாய் உணர்வீர்கள்.
8)அடிக்கடி ச்சே ஊரா இது, எங்க ஊரெல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா? என்ற வசனத்தை யாரிடமாவது சொல்லிக் கொண்டே இருப்பீர்கள்.
9) சொந்தங்கள் சேர்ந்த சுப நிகழ்ச்சுகளில் , மாமாக்கள் எல்லாம் கல்யாணம் எப்பன்னு கேட்டா , அத்தைமார்கலெல்லாம் எத்தனை பௌன் சேர்த்து வச்சுருக்கிங்கன்னு ? கேட்பார்கள்.
10) அம்மாவையும் , அப்பாவையும் உங்கள் இரு சக்கரவண்டியில் ஏற்றிச் செல்ல ஆரம்பித்திருப்பீர்கள்.
11) புதிதாய் செல்லும் இடங்களில் மனதில் இருக்கும் பயம் கண்களில் தெரியக்கூடாது என்பதில் மிகவும் கவனமாய் இருப்பீர்கள்.ஒரு ஆணைப் போல் நடந்துக் கொள்ள முடிந்த அளவு முயற்சி செய்வீர்கள்.
12) வெளியில் சென்று வீடு திரும்பியதும், பேருந்தில் இடிபட்டதையும் , மொபைல் நம்பர் கேட்டு பின்னால் வந்த ஆணை பற்றியும் வீட்டில் மூச்சு விட
மாட்டீர்கள்.தேவையற்ற பயத்தை அவர்களுக்கு தரவேண்டாம் என எண்ணுவீர்கள்.
13) உங்களுக்கென ஒரு கனவு உண்டா? என்பதை சுற்றி இருக்கும் யாரேனும் கேட்கமாட்டார்களா என ஏங்குவீர்கள்.
14) எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலும் , நம்பிக்கையும் நிறைந்து இருக்கும். வாய்ப்புகள் வந்தாலும் பெண் என்பதால் வந்த வாய்ப்பு என்றுச் சொல்ல வாய்கள் அதிகம் காத்திருக்கும்.
15) எத்தனை சோகம் கண்ட போதிலும் , பெண்ணாய் பிறந்ததற்காக பெருமை கொள்வீர்கள்.
16) அப்பா அதட்டி ஒரு சொல் சொல்லிவிட்டால் கலங்கிடும் கண்கள் , அலுவலகத்தில் யார் முன்போ திட்டு வாங்கி விட்டால் கூட கொஞ்சமும் கலங்காது. அழுதால் அதற்கும் இந்த உலகம் நீலிக்கண்ணீர் என்றொரு பெயர் வைக்கும் என்பதை புரிந்திருப்பீர்கள்.
எத்தனை பெண்களுக்கு பொருந்தும் பதிவு எனத் தெரியாது.

மார்பகங்களால் அவதிப்படும் பெண்களுக்கு!



பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் மார்பகங்கள். இந்த பிரச்சினையை பெரிய அளவில் மார்பகங்கள் இருக்கும் பெண்கள் தான் அதிகம் சந்திப்பார்கள். மேலும் இப்படி மார்பகங்கள் பெரியதாக இருக்கும் பெண்களால் தாங்கள் விரும்பிய ஆடைகளைத் தான் அணிய முடியும். ஏனெனில் ஒருசில ஆடைகளை அவர்களை மிகவும் அசிங்கமாக வெளிக்காட்டும்.

பொதுவாக மார்பகங்கள் வயதாகினால், தாய்ப்பால் கொடுப்பதால், சரியான உள்ளாடைகளை அணியாததால், ஊட்டச்சத்து குறைப்பாட்டினால், இறுதி மாதவிடாய் நெருங்கினால் மற்றும் புவி ஈர்ப்பு விசையினால் தொங்க ஆரம்பிக்கும். ஆனால் பெண்கள் தங்களின் மார்பகங்கள் தொங்கி காணப்படுவதற்கான காரணங்கள் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. மாறாக, அறுவை சிகிச்சை மூலம் அதனை சரிசெய்ய நினைக்கின்றனர். இதனால் பல்வேறு பக்க விளைவுகளை சந்திக்கக்கூடும் என்பது தெரியுமா?

ஆனால், தொங்கும் மார்பகங்களை ஒரு சில இய ற்கை வழிக ளின் மூலம் சரிசெய்யலாம். இங்கு அசிங்கமாக காணப்படும் தொங்கும் மார்பகங்களை சரிசெய்வதற்கான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றி வந்தால், மார்பகங்கள் தொங்கிக் காணப்படுவதைத் தடுக்கலாம்.

உடலில் புரோட்டீன் குறைபாடுகள் இருந்தால், அவை மார்பக தசைகளை தளரச் செய்து, மார்பகங்களைத் தொங்கச் செய்யும். ஆகவே, புரோட்டீன் உணவுகளுடன், தக்காளி, வெங்காயம், கேரட், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், பூண்டு போன்ற காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், மார்பகங்களை அழகாக சிக் கென்று வைத்துக் கொள்ளலாம்.

தரையில் படுத்துக் கொண்டு தம் புள்ஸ் ஐ மார்ப கங்களுக்கு மேலே தூக்கி 10 வரை எண்ணிக் கொண்டு பிடித்திருக்க வேண்டும். பின் அதனை மார்பகங்களுக்கு பக்கவாட்டில் மடக்கி 10 வரை எண்ணிப் பிடிக்க வேண்டும். இது போல் தினமும் 10 முறை செய்தால், மார்பகங்களின் தளர்ச்சியைத் தடுக்கலாம்.

குப்புறப்படுத்துக் கொண்டு, கைகளை தரையில் மார்பங்களுக்கு நேராக நீட்டி உடலே மேலே தூக்கி, கால்களை மேல்புறமாக தூக்கி, தரையைத் தொடாமல் முன்புறமாக குனிந்து 10 வரை எண்களை எண்ணி, பின் மீண்டும் பழைய நிலைக்கு செல்ல வேண்டும். இதுபோன்று தினமும் 10 முறை செய்து வந்தாலும், தொங்கும் மார்பகங்களை சரிசெய்யலாம்.

தினமும் 15 நிமிடம் கையால் மேல்புறமாக மார்பகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இதனால் மார்பகத்தில் இரத்த ஓட்டமானது அதிகரித்து, மார்பகங்களில் உள்ள திசுக்கள் மற்றும் தசைகளை வலிமையாக்கி, மார்பகங்கள் தளர்ந்து இருப்பதை சரிசெய்யும்.

ஐஸ் கட்டிகளை எடுத்து மார்பகத்தின் மீது வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்யும் மசாஜானது ஒரு நிமிடத்திற்கு மேல் செய்யக் கூடாது. இல்லாவிட்டால், ஐஸ் கட்டிகளானது மார்பகங்களில் கட்டிகளை ஏற்படுத்திவிடும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செயது வந்தால், மார்பக தசைகளானது வலிமையடையும். பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் மார்பகங்களை மசாஜ் செய்து வந்தாலும், மார்பகங்களானது இறுக்கமடைய ஆரம்பிக்கும்.

WAHT IS FAMILY

 

1. நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய
இடம் நம் குடும்பமே...

2. கணவன் - மனைவி உறவுக்கு இணையாக உலகில்
வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.

3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள்
அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்த நிலையிலும்
உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.

4. வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப
அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய
வேண்டாம். அது குடும்ப அமைதியை குலைக்கும்.

5. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும்
பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது,
பெரும்பாலானோர் பொருளீட்டும் திறன்
பெற்றிருத்தல் வேண்டும்.
சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம், சிலர் குறைவாக
சம்பாதிக்கலாம். எப்படி இருந்தாலும் அதை காப்பது,
நுகர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில்
சமமான பொறுப்பு வேண்டும்.

6. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத்
தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும்,
செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக
இருக்காது. அது பிரச்சினைகளுக்கு இடம்தரும். மனதில்
ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால்
அங்கே தெய்வீக உறவு இருக்காது.

7. குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சகிப்புத்
தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம் ஆகிய
மூன்றையும் கடைப்பிடித்து வர வேண்டும்.

8. பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல்
பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிவகுக்கும்.

9. தனக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும்
குறை கொள்ளத் தேவையில்லை. அவரவர்
அடிமனமே இதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.

10. நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப்
பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப
அமைதி இன்றியமையாததாகும்.

ஏனென்றால் நான் உன்னை காதலிக்கிறேன்...



"சாப்டியா ?" என Message அனுப்பும் காதலியாக வேண்டாம்...!

"சாப்பிடு" என ஊட்டிவிடும் மனைவியாக வேண்டும்...!
 
"Take care" என்று சொல்லும் காதலியாக வேண்டாம்...!
 
"I will take care for you" என இருக்கும் மனைவியாக வேண்டும்...!
 
உன் தாய் தந்தையருக்கு தெரியாமல் உரையாடும் காதலியாக வேண்டாம்...!
 
உன் தாய் தந்தையரோடு உரையாடும் மனைவியாக வேண்டும்...!
 
கண்ணில் கனவுகளோடு காத்திருக்கும் காதலியாக வேண்டாம்...!
 
நெஞ்சில் உன்னை சுமக்கும் மனைவியாக வேண்டும்...!
 
உன் அழகை ரசிக்கும் காதலியாக வேண்டாம்...!
 
உன்னை அழகாய் ரசிக்கும் மனைவியாக வேண்டும்...!
 
* ஏனென்றால் நான் உன்னை காதலிக்கிறேன்...